Schools & Colleges in Tamil Nadu has Declared holiday due to Rain

From november month heavy rain in northern part of india like Tamilnadu , Kerala , Andhara Pradesh and Karnataka . Some districts of Tamil nadu has declared holiday for schools and Colleges on Today (30.11.2021) due to the heavy rain. Holiday declared districts are listed below. This web page is Updated 5 Minutes once. so If your District is not in this list , Kindly Visit this webpage after 5 to 10 minutes.

School and College Holiday Declared districts due to rain

Schools & CollegesSchools Only
TiruvallurChengalpattu
Thoothukudi Kanchipuram
MaduraiTirunelveli
Sivagangai Ramanathapuram
Cuddalore
Dindigul
Nilgiris
Theni

கனமழை காரணமாக இன்று (30.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

அண்மைக்காலமாக தமிழகம் , ஆந்திரா மற்றும் பல மாநிலங்களில் தொடரும் கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக தொடர் கனமழை பெய்து வரும் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக , இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மாவட்டங்களின் பட்டியலை கீழே வழங்கியுள்ளோம். இந்த தளமானது 5 நிமிடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டு வருவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களின் பட்டியலும் கீழே வழங்கப்பட்டுள்ளது. தங்கள் மாவட்டத்திற்கு இன்னும் விடுமுறை வழங்கவில்லை என்றால் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் கழித்து வந்து பார்க்கவும்.

பள்ளி , கல்லூரிகளுக்குபள்ளிகளுக்கு மட்டும்
தூத்துக்குடிகாஞ்சிபுரம்,
திருவள்ளூர்செங்கல்பட்டு
மதுரை திருநெல்வேலி
சிவகங்கை ராமநாதபுரம்
கடலூர்
தேனி
நீலகிரி
திண்டுக்கல்

ஏற்கனவே பெய்த கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏரி , குளங்கள் , குட்டைகள் மற்றும் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து வெள்ளம் போல் செல்கின்றன. ஒருசில மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி உள்ளதால் அவை என் நேரத்திலும் உடைத்துக்கொண்டு வெள்ளம் வரலாம் என்ற காரணத்தை கருத்தில் கொண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்தின் பேரில் ஆன்லைன் வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை நாட்களை மாணவர்கள் பயனுள்ள வகையில் தாங்கள் ஏற்கனவே படிக்காமல் இருக்கக்கூடிய தலைப்புகள் மற்றும் பாடங்களைப் படிப்பதற்கு இந்த நேரங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏற்கனவே குருணை பரவல் காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்ட நிலையில் பல மாணவர்களின் மனதில் தற்போது எழுந்துள்ள கேள்வி என்னவென்றால் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நவம்பர் மாதத்தில் மட்டும் 20 நாட்களுக்கும் மேலாக விடுமுறை விடப்பட்டுள்ளதால் , மறுபடியும் ஏதேனும் குறைக்கப்படுமா ? 

     இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மழைக்கால விடுமுறைக்காக பாடங்களை குறைக்க முடியாது என்றும் , இந்த விடுமுறைகளை ஈடுசெய்யும் வகையாக பள்ளிகள் திறக்கப்பட்ட பின் சிறப்பு வகுப்புகள் வைத்த அந்த பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் . இது போன்ற மழைக்கால விடுமுறைகள் , கல்வி தகவல்கள் போன்ற பல செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது டெலிகிராம் குழுவில் இணைக்கவும். இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் தங்களுக்கு தெரிந்த மாணவச் செல்வங்கள் மட்டும் ஆசிரிய பெருமக்களுக்கு பகிரவும்.

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *